ஹிக்கடுவையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி – சந்தேக நபர் அடையாளம்
1 view
ஹிக்கடுவையில் உள்ள தொடண்டுவ மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளது. நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும், அதில் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
The post ஹிக்கடுவையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி – சந்தேக நபர் அடையாளம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹிக்கடுவையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி – சந்தேக நபர் அடையாளம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.