ரணிலின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் CID விசாரணை!
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் முன் உண்மைகளை முன்வைத்த, பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
The post ரணிலின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் CID விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் CID விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.