பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது!
13 view
பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார் இந் நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் நாளைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.