நள்ளிரவில் திடீர் சோதனை; கிளிநொச்சியில் இளைஞன் கைது..!
1 view
கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றையதினம்(08) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு11.20 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
The post நள்ளிரவில் திடீர் சோதனை; கிளிநொச்சியில் இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நள்ளிரவில் திடீர் சோதனை; கிளிநொச்சியில் இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.