திருமலையில் கொட்டிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்..!
12 view
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம்,கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நேற்றையதினம்(30) பெய்த கனமழையால் நீரில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்களும் கிண்ணியா சூரங்கல் பகுதியை அண்டிய பல ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது . தற்போது நிலத்தை பதப்படுத்தி நெற் செய்கைக்காக விதைத்து ஓரிரு நாட்களின் பின்பே கனமழை காரணமாக நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
The post திருமலையில் கொட்டிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் கொட்டிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.