மூதூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
1 view
மூதூர் தங்கபுரம் காட்டுப் பகுதியில் இயங்கிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை மூதூர் பொலிஸார் நேற்று முற்றுகையிட்டு கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரும் தொகை கோடாவினை கைப்பற்றியுள்ளனர். இதன் மூன்று பரல்களிலிருந்து தலா 180 லீற்றர் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவினை கைப்பற்றியுள்ளனர். மேலும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post மூதூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.