தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 168 முறைப்பாடுகள் பதிவு
6 view
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நேற்று வரை 168 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 132 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 36 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 18 வேட்பாளர்களும் 61 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
The post தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 168 முறைப்பாடுகள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 168 முறைப்பாடுகள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.