மஸ்கெயாவில் பேருந்தும் பார ஊர்தியும் மோதி விபத்து; இரண்டு மணிநேரம் முடங்கிய போக்குவரத்து
6 view
மஸ்கெயாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டன் பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றது. இதனால் ஹட்டன் – மஸ்கெலியா போக்குவரத்து சுமார் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் வந்து போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதி மீண்டும் வளமைக்கு திரும்பியது.
The post மஸ்கெயாவில் பேருந்தும் பார ஊர்தியும் மோதி விபத்து; இரண்டு மணிநேரம் முடங்கிய போக்குவரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெயாவில் பேருந்தும் பார ஊர்தியும் மோதி விபத்து; இரண்டு மணிநேரம் முடங்கிய போக்குவரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.