யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா..!
11 view
யாழ். சாவகச்சேரி -கச்சாய் வீதி பகுதியில் இரண்டு திருநிறைச் செல்விகளுக்கு பிரமாண்டமான முறையில் மஞ்சள் நீராட்டு விழா நடாத்தப்பட்டது. ஆரம்பத்தில் இரு திருநிறைச் செல்விகளும் பெரியப்பாவின் இல்லத்தில் இருந்து பல்லக்கில் ஏற்றி தவில் நாதஸ்வரம் இசைக்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டங்களுடன் அவர்களது இல்லம் வரை அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் மணவறையில் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
The post யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.