சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை
6 view
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் 16.03.2025 இன்று முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடைபோர்த்தி மதிப்பளித்தார். […]
The post சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.