கணேமுல்ல சஞ்சீவவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..!
5 view
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டினால் மார்பு, வயிறு மற்றும் தலையின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பல காயங்களால் சஞ்சீவவின் மரணம் நிகழ்ந்ததாக கொழும்பு நீதவான் இன்று (28) தீர்ப்பளித்தார். இறப்புச் சான்றிதழை வழங்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் இறுதி சாட்சியாக சஞ்சீவவின் சகோதரி இன்று சாட்சியம் அளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
The post கணேமுல்ல சஞ்சீவவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கணேமுல்ல சஞ்சீவவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.