தென் கொரிய தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு
7 view
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை (03) கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ, 26வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும்,இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து நட்புரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
The post தென் கொரிய தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென் கொரிய தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.