தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மாவைக்கு அஞ்சலி..!
6 view
மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராசா நேற்றையதினம்(29) இரவு காலமான நிலையில் தற்போது அவரது பூதவுடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சற்றுமுன்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மாவைக்கு அஞ்சலி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மாவைக்கு அஞ்சலி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.