கைவிடப்பட்ட நிலையில் அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு
10 view
கொழும்பு – 07இல் அமைந்துள்ள சிராவஸ்தி மாளிகையில் கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கத்துக்குக் சொந்தமான ஏராளம் வாகனங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆடம்பர பீ.எம்.டப்ளியூ கார்கள் தொடக்கம் மொண்டரோ உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் அங்கு, துருப்பிடித்தும் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. சிராவஸ்தி மாளிகையை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தங்கு விடுதியாக பயன்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாளிகை முன்னைய காலத்தில் மேல் மாகாண சபையின் பிரதான அலுவலகமாக பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post கைவிடப்பட்ட நிலையில் அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைவிடப்பட்ட நிலையில் அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.