மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!
8 view
திஹகொட பகுதியில் மத்தியஸ்த சபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்விலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.