யாழில் திமிங்கல ஆம்பரை கைப்பற்றல் – ஒருவர் கைது!
7 view
யாழ்ப்பாணத்தில் திமிங்கல ஆம்பரை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (18) யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே குருநகர் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 465 கிராம் ஆம்பர் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், அதன் பெறுமதி சுமார் 20 லட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
The post யாழில் திமிங்கல ஆம்பரை கைப்பற்றல் – ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் திமிங்கல ஆம்பரை கைப்பற்றல் – ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.