இந்திய உயர்ஸ்தானிகர்- நாமல் திடீர் சந்திப்பு..!
6 view
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில்(15) நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவு குறித்தும், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post இந்திய உயர்ஸ்தானிகர்- நாமல் திடீர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய உயர்ஸ்தானிகர்- நாமல் திடீர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.