வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: இந்தோனேஷியர்கள் நுவரெலியாவில் கைது
11 view
வீசா விதிமுறைகளை மீறி, ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 8 இந்தோனேஷியர்களை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டவர்கள் சிலர், ஆன்மீக போதனைகளில் ஈடுபடுவதாக நுவரெலிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போதே, அவர்கள் வருகைதரு வீசாவில் வந்துள்ளமையும், அந்த வீசா விதிகளின் பிரகாரம் அவர்களுக்கு ஆன்மீக பிரசாரத்தில் ஈடுபட முடியாது என்பதும் தெரியவந்துள்ளது.
The post வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: இந்தோனேஷியர்கள் நுவரெலியாவில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: இந்தோனேஷியர்கள் நுவரெலியாவில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
