வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது!
15 view
5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்று (04) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் செல்வதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வட்டுக்கோட்டை தபால் நிலையத்திற்கு அருகே வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
The post வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
