கல்வி அமைச்சிற்கு முன் பதற்றம்; மூவர் கைது – போக்குவரத்தும் முற்றாக பாதிப்பு
18 view
இசுறுபாய முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது. ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. பொரளை – கொட்டாவ 174 பஸ் வீதியின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
The post கல்வி அமைச்சிற்கு முன் பதற்றம்; மூவர் கைது – போக்குவரத்தும் முற்றாக பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி அமைச்சிற்கு முன் பதற்றம்; மூவர் கைது – போக்குவரத்தும் முற்றாக பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
