மழை அனர்த்தத்தால் யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு..!
11 view
மழை அனர்த்தத்தினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், J/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு குடும்பங்களின் வீட்டின் மீதும் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post மழை அனர்த்தத்தால் யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மழை அனர்த்தத்தால் யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
