யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
10 view
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டாரவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 120 மில்லி கிராம் ஹொரோயினுடன் 28 வயதுடைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
