சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – பொலிஸார் தீவிர பாதுகாப்பு!
13 view
வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் சுமந்திரன் அவர்கள் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிசார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
The post சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – பொலிஸார் தீவிர பாதுகாப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – பொலிஸார் தீவிர பாதுகாப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
