வடக்கில் எல்லை மீறும் போதைப்பொருள் வியாபாரம் – களத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார்
6 view
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய ,வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவித்தார். தற்பொழுது வடக்கு மாகாணத்தில் அனைவராலும் பேசப்படுகின்ற விடயமாக போதைப் பொருள் விடயம் காணப்படுகிறது. பொலிஸார் வடக்கு மாகாணத்தில் போதை ஒழிப்பு செயற்பாட்டிற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் அதாவது பாடசாலைகளில் விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பொலிசாரால் மாத்திரம் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாது.குறிப்பாக வடக்கில் உள்ள மக்கள் வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்புனை வழங்க வேண்டும். அதாவது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் வைத்தியராக பொறியியலாளராக வரவுள்ளவர்கள். அவ்வாறான ஒரு சமுதாயத்தினை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக விடுவது பெரும் குற்றமான விடயமாகும் என்றார்.
The post வடக்கில் எல்லை மீறும் போதைப்பொருள் வியாபாரம் – களத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் எல்லை மீறும் போதைப்பொருள் வியாபாரம் – களத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
