குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிப்பு – விமல் தெரிவிப்பு
6 view
“ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. அதனால்தான் அவர்களை மக்கள் கூண்டோடு விரட்டியடித்தார்கள்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ‘நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட்டீர்கள். ஆனால், இறுதியில் அவர்களை நீங்கள் வெறுத்தமைக்குக் காரணம் என்ன? அவர்களை மக்கள் விரட்டியடிக்கக் காரணம் என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மஹிந்த ராஜபக்ச – கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்கள். அப்படியான தலைவர்களைத் தோல்வியடைந்த தலைவர்களாக வீட்டுக்கு அனுப்பிவைக்க நாம் விரும்பவில்லை. ஆனால், அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறின . மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் போதே கௌரவமாக ஓய்வு பெற…
The post குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிப்பு – விமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிப்பு – விமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
