இலங்கையில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி
7 view
இலங்கையில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இத்தாலி பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) கடுங்காவல் தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, ‘வட்டிய ஜிபேட்’ என்ற 40 வயது குற்றவாளிக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டது. மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த தஹன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இந்த வெளிநாட்டுப் பிரஜை கடந்த 2019 பெப்ரவரி 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கந்தானை பிரதேசத்தில் வைத்து 90 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post இலங்கையில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
