ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது!
6 view
ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்ட ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெயின் விலை வரம்பு அமுலுக்கு வந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வந்த பீப்பாய் ஒன்றுக்கு 60 டொலர்கள் என்ற உச்சவரம்பு, உக்ரைனில் அதன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அது உலகளாவிய சந்தைக்கு தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்கிறது. எவ்வாறாயினும், உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருந்தாலும், இந்த நடவடிக்கைக்கு கட்டுப்பட மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. கடல் வழியாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் உறுதிமொழிகளுக்கு மேல் இந்த வரம்பு வருகிறது. இதன் பொருள் ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டொலர்களுக்கு சமமான அல்லது அதற்கும் குறைவான விலையில் மட்டுமே விற்கப்படும். ஜி7 மற்றும் ஐரோப்பிய டேங்கர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும்…
The post ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
