நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி திட்டம்..?

6 view
கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. தற்போதுள்ள பொருளாதாரம் பழைய நிலைமைக்கு மீளவில்லை என்றால், அதனை ரணில் விக்கிரமசிங்க தனியே பொறுப்பேற்க வேண்டும் என்பதாலேயாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற போது அதியுயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரி கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆவார். இதனால் நந்தலால் – ரணில் இடையே மனக்கசப்புகள் இருந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. நந்தலால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.  மேற்படி விடயத்தை உடனடியாக சரி செய்யுமாறு ஜனாதிபதி ஆஷு மாரசிங்கவிடம் தெரிவித்திருந்தமையினால் அவர் உடனடியாக ஊடக சந்திப்பில் தான் பொய்யான கருத்தொன்றினை தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.…
The post நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி திட்டம்..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース