ரணிலின் சொல் ஒன்று செயல் வேறு வடிவமாக இருக்கிறது- இராதாகிருஷ்ணன் எம்.பி ஆதங்கம்!
6 view
கர்ணன் நல்லவர். சிறந்த கொடையாளி. ஆனாலும் துரியோதனன் பக்கம் நின்றதால் அவரை வதம் செய்ய வேண்டியநிலை கிருஷ்ண பகவானுக்கு ஏற்பட்டது. அதுபோலவே ரணில் விக்கிரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வட்டவளையில் 05.12.2022 அன்று இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்பமே பிரதான காரணம். சீனாவிடமிருந்து பெருந்தொகை கடன்பெற்று, அவை தேவையற்ற அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்பட்டன. காலியில் ஒரு துறைமுகம் இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தாமல் அம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்? போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என பிரதமரான…
The post ரணிலின் சொல் ஒன்று செயல் வேறு வடிவமாக இருக்கிறது- இராதாகிருஷ்ணன் எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் சொல் ஒன்று செயல் வேறு வடிவமாக இருக்கிறது- இராதாகிருஷ்ணன் எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
