உணவு பற்றாக்குறையினால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு?
14 view
மிகவும் பெறுமதியான 07 குதிரைகள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவலை பொலிஸ் குதிரைப்படை பிரிவு மறுத்துள்ளது. சுமார் 35 அமெரிக்க டொலர் பெறுமதியான குதிரைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இது தொடர்பில் ´அத தெரண் நடத்திய விசாரணையின் போது, கடந்த 3 மாதங்களில் மூன்று குதிரைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றுள் இரண்டு குதிரைகள் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக பொலிஸ் குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒரு குதிரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குதிரைகளுக்கு வழங்கப்படும் சில தீவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கைக்கு தீவனம் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
The post உணவு பற்றாக்குறையினால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு பற்றாக்குறையினால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
