இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! அரசு வெளியிட்ட அறிவிப்பு
6 view
இம்மாத இறுதியில் 60 வயதில் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், முழு அரச சேவையிலிருந்தும் சுமார் இருபத்தைந்தாயிரம் பேர் ஓய்வுபெற உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் முழு அரச சேவையிலும் சுமார் 15 இலட்சம் பேர் உள்ளதுடன், இருபத்தைந்தாயிரம் பேர் ஓய்வு பெறுவதனால் அரச சேவை வீழ்ச்சியடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பொதுப்பணித்துறையில் உள்ள பெரும்பாலான உயர் அதிகாரிகள், 60வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 31ம் திகதி ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அரச சேவையை 65 வருடங்களாக நீடிப்பதாக…
The post இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! அரசு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! அரசு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
