சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் – வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள்! இலங்கையில் தொடரும் சீரழிவுகள்
7 view
மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்த குற்றத்தில் மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை, அதே வகுப்பில் கற்கும் சிறுவன் 2 மாதங்களுக்கு முன்னர், தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அப்போது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சியை சிறுவனின் நண்பர்கள் 3 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சிறுவனின் நண்பர்கள் சிறுமியை தொடர்புகொண்டு, வீடியோ பதிவை பற்றி கூறி, தங்களுடனும் உறவுகொள்ள அழைத்து மிரட்டியுள்ளனர். தங்கள் விருப்பத்துக்கு இணங்காவிட்டால், வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக சிறுமியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விடயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட…
The post சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் – வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள்! இலங்கையில் தொடரும் சீரழிவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் – வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள்! இலங்கையில் தொடரும் சீரழிவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
