சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது- கடற்றொழிலாளர் சங்கங்கள்!
6 view
கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன கூட்டாக வலியுறுத்தின. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன இதனை தெரிவித்தன. மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அதற் கெதிராக குரல் கொடுக்க வேண்டும். சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறையிட்டோம் அனலைதீவு பருத்திதீவு பகுதியில் ஒரிருவருக்கு கடலட்டை பண்ணைகளை வழங்கினால் அங்கு இதுவரை காலமும் தொழில் செய்த 700 தொழிலாளர்களும் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார். கடலட்டை பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர் வீச்சு வலை தொழிலாளர்கள் அடிவலை தொழிலாளர்கள் இறால் பிடியை மேற்கொள்வொர்…
The post சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது- கடற்றொழிலாளர் சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது- கடற்றொழிலாளர் சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
