மலையகத்தில் 100 ஹெக்டயர் தேயிலை மீள்நடுகை!!
12 view
அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்டையாக்கத்திற்கும் (SLSPC) இடையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பல்வேறு விடயங்கள் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. அரச பெருந்தோட்டயாக்கத்தின் தலைவர் ஸ்ரீமால் விஜய்சேகர, அதன் பொது முகாமையாளர் மற்றும் நிதி முகாமையாளர் உடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் பன்வில பிரதேசத்தின் பணிப்பாளர் மோகனதாஸ், பன்வில பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம், மாத்தளை மாநில இயக்குனர் கமலநாதன், ரங்களை இயக்குனர் ராஜா மற்றும் மாவட்டத் தலைவர்கள் குரூப் கமிட்டி தலைவர்கள் அமைப்பாளர்களும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி இக்குழு கலந்துரையாடலில் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக செலுத்தப்படாத இருந்த ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் அவர்களின்…
The post மலையகத்தில் 100 ஹெக்டயர் தேயிலை மீள்நடுகை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகத்தில் 100 ஹெக்டயர் தேயிலை மீள்நடுகை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
