போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு உதவத் தயார்! – வடக்கு ஆளுநரின் அறிவிப்பு
7 view
வடமாகாணத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். அண்மையில் யாழ். சிறைச்சாலையில் உள்ள போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடினேன். போதை பொருள் பாவனைகளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கு மாகாணத்தில் பல்வேறு வேலை திட்டங்கள் சமுதாய மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து மனநலப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நோயாளியின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்காக விசேட வைத்தியரைக் கலந்தாலோசிக்க தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களில் திடீரென இறந்து போனமை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. அதன் பின்னணியை புரிந்து கொள்ள குடும்பத்தை சந்தித்த நிலையில் …
The post போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு உதவத் தயார்! – வடக்கு ஆளுநரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு உதவத் தயார்! – வடக்கு ஆளுநரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
