ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்கச் சதித்திட்டம்! அம்பலப்படுத்திய அமைச்சர்
10 view
“பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்க ‘மொட்டு’ க் கட்சியில் உள்ள ஒரு குழுவினர் திரைமறைவில் திட்டம் தீட்டுகின்றனர். இதற்கு ஒருபோதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கமாட்டார். நாமும் அசைந்து கொடுக்கமாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ‘பிரதமரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அந்தப் பதவிக்கு நீங்கள் முயற்சி செய்தமை உண்மையா?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இந்த ஆண்டு மே 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சிலர் கூடிப் பேசி என்னைப் பிரதமராக்க விரும்பினர். நான் மறுத்துவிட்டேன். அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாகினார். அந்தவேளையிலும் என்னைப் பிரதமராக்க ‘மொட்டு’க் கட்சியில் உள்ள சிலர் விரும்பினர். அப்போதும் நான்…
The post ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்கச் சதித்திட்டம்! அம்பலப்படுத்திய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்கச் சதித்திட்டம்! அம்பலப்படுத்திய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
