அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை மாற்றம்: அதிகளவிலான மீன்கள் பிடிபட்டன
30 view
அம்பாறை, டிச 04 திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று , இன்றும் இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறித்த பாரை மீன் ஒன்றின் விலை 1500 ரூபா முதல் 1800 வரை விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை மலிவான விலையில் கிளவாலட வளையா போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வளையா மீன் 1கிலோ 400 ருபாவாகவும் கிளவால் 1கிலோ 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
The post அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை மாற்றம்: அதிகளவிலான மீன்கள் பிடிபட்டன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை மாற்றம்: அதிகளவிலான மீன்கள் பிடிபட்டன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
