கிழக்கு மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
6 view
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய, பாரை மீன்கள், வளையா மீன்கள், சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 3ம் திகதி மற்றும் இன்றைய தினம் 04ம் திகதி இவ்வாறு மருதமுனை,சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1500 ரூபா முதல் 1800 வரை விற்பனையாவதுடன். இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின், நாள் வருமானமாக 10 முதல் 20 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதே…
The post கிழக்கு மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
