அதிகாரத்தை வழங்கினால் வடக்கு கிழக்கை நாமே அபிவிருத்தி செய்வோம் – சபையில் சாணக்கியன் ஆவேசம்!
25 view
சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிடடார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களைக் காண முடியாது. நகரங்கள் இருந்தால்தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை. நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன. எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை. 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால்தான் அபிவிருத்தி செய்யலாம் என்று…
The post அதிகாரத்தை வழங்கினால் வடக்கு கிழக்கை நாமே அபிவிருத்தி செய்வோம் – சபையில் சாணக்கியன் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகாரத்தை வழங்கினால் வடக்கு கிழக்கை நாமே அபிவிருத்தி செய்வோம் – சபையில் சாணக்கியன் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
