புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானது- சீ.வீ.கே.சிவஞானம் கண்டனம்!
38 view
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் யாழிலுள்ள தமது அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டில் வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானதாகும். ஏற்கனவே ஒரு நியதிச் சட்டம் அமுலில் இருந்தமை பற்றி, அதனைப் பிரதி பண்ணிய ஆளுநர் மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பது இதனால் வெளிப்படையாகியுள்ளது. ஆளுநரால் நியதிச் சட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தின் உள்ளடக்கம் 90 வீதம் மேலே குறிப்பிடப்பட்ட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தை ஒத்ததாகவே உள்ளது. அதிலுள்ள முக்கிய மாற்றம் “பணியகத்தின் முகாமைத்துவ சபையின்…
The post புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானது- சீ.வீ.கே.சிவஞானம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானது- சீ.வீ.கே.சிவஞானம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
