இந்திய தமிழகத்தில் 13 பேருக்கு கொரோனா
14 view
சென்னை, டிச 03 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆண்கள், 10 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் உள்பட மொத்தம் 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தேனி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
The post இந்திய தமிழகத்தில் 13 பேருக்கு கொரோனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய தமிழகத்தில் 13 பேருக்கு கொரோனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
