யாழ்.தாவடி பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்
14 view
யாழ்ப்பாணம்,டிச 03 யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். இன்று(03) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழ்.தாவடி பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.தாவடி பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
