ரூ.70 லட்சத்துக்கு விதைப்பை கடத்தல்
16 view
சிறுநீரக கடத்தல் தொடர்பில் வௌிப்படுத்தப்பட்ட பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் விதைப்பை கடத்தலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உறுப்புக் கடத்தல் தொடர்பில் உக்குஸ்ஸாவினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த வைத்தியசாலையில் விதைப்பை கடத்தலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வைத்தியசாலைக்கு சிறுநீரக தானம் செய்ய ஆட்களை அறிமுகப்படுத்திய ´பாய்´ எனப்படும் பிரதான தரகர் விதைப்பைகளை தானம் செய்ய ஆட்களையும் அறிமுகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கொடுக்கப்படும் ஒரு விதைப்பையை 70 லட்சம் ரூபாய்க்கு குறித்த நபர் ஏலம் கோரியுள்ளார். தனது தேவைகளை பூர்த்தி செய்யவும், வீடு வாங்கவும் தனது விதைப்பைகளை தானமாக வழங்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார். எனினும் சிறுநீரகத்தை தானமாக வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை பணம் வழங்காத காரணத்தினால் இந்த இளைஞன் தனது விதைப்பையை தானமாக வழங்க மறுத்துள்ளார். அது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அந்த இளைஞன், பாய் என்ற நபருக்கு வைத்தியசாலையில் வைத்து எனது தம்பி சிறுநீரகத்தை கொடுத்தான். 22…
The post ரூ.70 லட்சத்துக்கு விதைப்பை கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூ.70 லட்சத்துக்கு விதைப்பை கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
