பலம் இல்லாத ரணிலுடன் பேசுவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரமா? – ஆனந்த சங்கரி கேள்வி
15 view
தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார். இன்றைய தினம்(03) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியமை சட்டவிரோதமானதாகவே பார்க்கிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாக அறிகின்றேன். 2004 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க சமஷ்டிக் கோரிக்கையுடன் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்தத் தேர்தலில் வெறும் தசம் மூன்று வாக்குகளில் ரணில் விக்கிரமசிங்க தோற்றுப் போக ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவானார். இப்போது மீண்டும் தமிழ் தேசியக்…
The post பலம் இல்லாத ரணிலுடன் பேசுவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரமா? – ஆனந்த சங்கரி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலம் இல்லாத ரணிலுடன் பேசுவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரமா? – ஆனந்த சங்கரி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
