நாட்டில் நிலவும் உணவு பஞ்சத்தின் விளைவை விரைவில் அவதானிக்கலாம்- சத்தியலிங்கம் ஆதங்கம்!
33 view
உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் என தமிழரசுக்கட்சியின் செயலாளர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா பூந்தோட்டத்தில் சேதன நகர வீட்டுத்தோட்டத்தில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என பாதீடு தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைக்கும் அரசியல்வாதிகளும் மற்றும் நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. இதன் தாக்கம் இன்னும் சில நாட்களில் மோசமாக தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. நிறை குறைந்த பிள்ளைகள் பிறக்கிறது பாடசாலை மாணவர்கள் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். உணவு பணவீக்கம் 90 வீதமாக உள்ளது. உலகத்திலேயே உணவு பணவீக்கம் கூடிய நாடுகளிலும் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியான கொள்கை வகுப்பாளர்கள் நிதானமான கொள்கை வகுப்பை மேற்கொள்ள வேண்டும். வவுனியாவில் விலங்குகளை…
The post நாட்டில் நிலவும் உணவு பஞ்சத்தின் விளைவை விரைவில் அவதானிக்கலாம்- சத்தியலிங்கம் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நிலவும் உணவு பஞ்சத்தின் விளைவை விரைவில் அவதானிக்கலாம்- சத்தியலிங்கம் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
