வவுனியா இரட்டைக்கொலை; குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு!
12 view
வவுனியாவில் கணவன்-மனைவியை கொன்று நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வவுனியா பன்றி பண்ணை குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த கந்தையா முத்தையா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டனர். தம்பதி கொலைச் சம்பவம் தொடர்பாக, அவர்களது வீட்டில் தோட்ட வேலைக்காக அமர்த்தப்பட்ட சாஸ்திரி கும்மாங்குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சிங்காரு சத்தியசீலன் மற்றும் சிங்காரு சதீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வவுனியா நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இரு எதிரிகளுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், கொல்லப்பட்டவரின் மகள், பொலிசார்,…
The post வவுனியா இரட்டைக்கொலை; குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா இரட்டைக்கொலை; குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
