அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு!
6 view
அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள டசன் கணக்கான மாவட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) கொவிட் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டன. நாடு புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும் நாட்டின் துணைப் பிரதமர் அறிவித்தார். துணைப் பிரதமர் சன் சுன்லன், நோயை ஏற்படுத்தும் வைரஸின் திறன் பலவீனமடைந்து வருவதாகக் கூறினார். சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் காணும் நிலையில் இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததால் அமைதியின்மை ஏற்பட்டது. பல சீனர்கள் நகரத்தில் நீண்டகாலமாக இருக்கும் கொவிட் கட்டுப்பாடுகள் இறப்புகளுக்கு பங்களித்ததாக நம்புகிறார்கள், இருப்பினும் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். இது பல்வேறு நகரங்களில் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. பின்னர் பலத்த பொலிஸ்…
The post அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
