வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா
30 view
வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று எதிர்வரும் 5ஆம் திகதி உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே 4ஆம் திகதி வரையில் மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாண்டு இதுவரை 04 தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் உருவாகின. எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது. இரண்டு தாழமுக்கங்கள் அவைக்கு அண்மையில் தோன்றிய உயரமுக்க நிலைமைகளால் தமது ஈரப்பதன் கொள்ளளவை இழந்து வரண்ட காற்றாகவே வீசின. ஒரு தாழமுக்கம் வடக்கு நோக்கி நகர்ந்ததனால் எமக்கு எத்தகைய பயனையும் தரவில்லை. எங்களின்( வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்)…
The post வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
