சமுர்த்தி பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
12 view
சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பொருத்தமில்லாதவர்கள் நீக்கப்பட்டால் பொருத்தமானவர்களுக்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். சுமார் 20 வருடங்களாக சிலர் அந்த பட்டியலில் இருப்பதாகவும் முதலில் யார் சரியானவர்கள், புதியவர்களை எப்படி சேர்ப்பது என்று கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதை சிலர் அரசியல் நடவடிக்கையாக பார்ப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post சமுர்த்தி பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமுர்த்தி பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
