யாழ். மாநகர சபைக்கு எதிராக 2வது நாளாக தொடரும் போராட்டம்!
6 view
கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. இது தொடர்பாக வலி. தென்மேற்கு பிரதேசசபையினர் கருத்து தெரிவிக்கையில், இன்று இரண்டாவது நாளாக எமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யாழ். மாநகர சபையானது எமது எல்லைக்குள் குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் அயலில் வசிப்பவர்களது வீட்டில் இலையான் தொல்லை அதிகரித்துள்ளது. அவர்கள் உண்ணும் உணவிலும் இலையான் மொய்ப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நாங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்…
The post யாழ். மாநகர சபைக்கு எதிராக 2வது நாளாக தொடரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாநகர சபைக்கு எதிராக 2வது நாளாக தொடரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
